திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Friday, September 17, 2010

17.09.2010 - ஆர்ப்பாட்டம்

*         வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வலியுறுத்தியும்,    
**       சட்டப்படியான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வலியுறுத்தியும்,
***    விலைவாசி உயர்வுக்கேற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு
****  செலவினத் தொகையை உயர்த்தி வழங்கிட வலையுறுத்தியும்
*****அரசின் அனைத்துத் துறை காலிப் பணியிடங்களிலும் சத்துணவு
           ஊழியர்களை பணி நியமனம் செய்திட வலியுறுத்தியும்

30.08.2010 அன்று அறவழிக்குட்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில/மாவட்ட/ஒன்றிய நிர்வாகிகள் நிரந்தரப் பணிநீக்கம் மற்றும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கக் கோரியும்  17.09.2010 அன்று மாலை 6-00 மணிக்கு திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் திரு து.இராஜகோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) திரு செ. நடராஜன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருமதி பாக்கியம்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் திருமதி சுசீலா, C.I.T.U. மாவட்டத் தலைவர் தோழர் கே.பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்டத் துணைத் தலைவர் திரு பி.விஜயகுமார் நன்றி கூறினார்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களைச் சார்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 86 பேர் கலந்து கொண்டனர்.