திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Monday, July 04, 2011

நினைவுப் பரிசு வழங்கும் விழா


           தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கம்,  திருப்பூர் மாவட்ட மையத்தின் சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்ட மையத்திற்கு நினைவுப் பரிசாக பீரோ வழங்கும் விழா 01.07.2011 வெள்ளிக்கிழமை மாலை 6-00 மணியளவில் வணிகவரி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

        விழாவிற்கு திரு அப்துல் ரஹீம், முன்னாள் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கம், திருப்பூர் அவர்கள் தலைமை தாங்கினார். 

        திருமதி ரோஸ்மேரி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

        திரு  சுந்தரராஜன், துணை வணிக வரி அலுவலர் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்க திரு  நடராஜன், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்ட மையம் பெற்றுக் கொண்டார்.
        திரு  கோவிந்தராஜூலு, முன்னாள் மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கம் அவர்களும், திரு  ஈஸ்வரமூர்;த்தி, மாவட்டச் செயலாளர். தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கம். திருப்பூர், திரு  சண்முகம், மாவட்டப் பொருளார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித துறை அலுவலர் சங்கம், திருப்பூர் மாவட்டம் மற்றும் திரு  இராஜகோபாலன், மாவட்டத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்டம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

        திரு மாரி, தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கம், திருப்பூர் அவர்கள்நன்றி கூறினார்.  

        விழாவில் தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும்,  தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டப் பொருளார் திரு அம்சராஜ், மாவட்டத் துணைத் தலைவர் திரு விஜயன், மாவட்ட இணைச் செயலாளர்கள் திரு பாஸ்கரன், திரு முருகசாமி, திரு முருகேசன், திருமதி ஜெனோவா,  மாநில மகளிர் துணைக் குழு உறுப்பினர் திருமதி  கோகுலராதா, அவிநாசி வட்டக் கிளைப் பொருளார் திரு கந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.