திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Thursday, September 30, 2010

28.09.2010 - திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசுகளின் புதிய பென்சன் திட்டத்தைக் கைவிடக் கோரி 28.09.2010 மாலை 6-00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் து.இராஜகோபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் செ.நடராஜன் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் என்.சுப்பிரமணியம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் முத்துநாராயணன் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் கந்தசாமி மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் பாக்கியம் ஆகியோர் பேசினர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத துணைத் தலைவர் தோழர் க.ஆறுமுகவள்ளல் நன்றி கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் எல்.ஐ.சி. பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பொதுத் துறை ஊழியர் சங்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை ஊழியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, September 26, 2010

25.09.2010 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்ட முடிவுகள்

1)    28.09.2010 அன்று புதிய பென்சன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிப்பது.

2)    01.10.2010 அன்று சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு இழப்புகள் குறித்து மாவட்ட அளவிலான முன்னணி ஊழியர் கூட்டம் நடத்தி பிரச்சார இயக்கம் நடத்துவது.

3)    14.10.2010  அன்று அனைத்து வட்டக் கிளைகளிலும் மாலை நேரத் தர்ணா நடத்துவது.

4)    20.10.2010 அன்று மாவட்ட அளவில் பேரணி நடத்துவது.

Wednesday, September 22, 2010

22.09.2010 - ஆர்ப்பாட்டம்

30.08.2010 அன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஊழியர்களில் 19 தோழர்களை நிரந்தரப் பணி நீக்கமும்,7 தோழர்களை தற்காலிக பணி நீக்கமும் செய்துள்ள தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட சத்துணவு ஊழியர்களை மீளப் பணியமர்த்த வலியுறுத்தியும், அச்சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின் படி பேரணி நடத்த காவல் துறையின் அனுமதி கிடைக்காததால் 22.09.2010 புதன் மாலை  6-00 மணிக்கு திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 53 ஆண்கள் 157 பெண்கள் ஆக மொத்தம்  210 நபர்கள் கலந்து கொண்டனர்.

தலைமை :-                                    திரு து. இராஜகோபாலன், 
                                                            மாவட்டத் தலைவர்
 
கோரிக்கை விளக்கவுரை:-     திரு செ. நடராஜன்,
                                                           மாவட்டச் செயலாளர் (பொறுப்பு)
வாழ்த்துரை:-
                                                           திரு எஸ்.முருகேசன்,மாவட்டத் தலைவர்,
                                                           தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்.

                                                           திரு எஸ். சௌந்திரபாண்டியன்,
                                                           BSNL ஊழியர் சங்கம்

நிறைவுரை:-                                 திரு சு. சிவக்குமார்   
                                                           மாநிலத் துணைத் தலைவர்,
                                                          தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

நன்றியுரை:-                                திரு ஜி. விஜயன்
                                                         மாவட்டத் துணைத் தலைவர்


Friday, September 17, 2010

17.09.2010 - ஆர்ப்பாட்டம்

*         வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வலியுறுத்தியும்,    
**       சட்டப்படியான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வலியுறுத்தியும்,
***    விலைவாசி உயர்வுக்கேற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு
****  செலவினத் தொகையை உயர்த்தி வழங்கிட வலையுறுத்தியும்
*****அரசின் அனைத்துத் துறை காலிப் பணியிடங்களிலும் சத்துணவு
           ஊழியர்களை பணி நியமனம் செய்திட வலியுறுத்தியும்

30.08.2010 அன்று அறவழிக்குட்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில/மாவட்ட/ஒன்றிய நிர்வாகிகள் நிரந்தரப் பணிநீக்கம் மற்றும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கக் கோரியும்  17.09.2010 அன்று மாலை 6-00 மணிக்கு திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் திரு து.இராஜகோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) திரு செ. நடராஜன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருமதி பாக்கியம்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் திருமதி சுசீலா, C.I.T.U. மாவட்டத் தலைவர் தோழர் கே.பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்டத் துணைத் தலைவர் திரு பி.விஜயகுமார் நன்றி கூறினார்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களைச் சார்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 86 பேர் கலந்து கொண்டனர்.