திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Saturday, January 22, 2011

போராட்ட ஆயத்த மாநாடு

ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை முடிவுகளின்படி ஊதிய மாற்றத்திலுள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் அனைத்து சங்கங்களையும் உடனடியாக அழைத்துப் பேசுதல் உள்ளிட்ட பத்தொன்பது அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி 22.01.2011 சனிக்கிழமையன்று திருப்பூரில் மாவட்டத் தலைவர் தோழர் து.இராஜகோபாலன் தலைமையில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் தோழர் செ. நடராஜன் வரவேற்புரையாற்றினார்.  தொலை தொடர்பு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகி தோழர் செல்லத்துரை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் அ.நிசார் அகமது ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநிலத் துணைத் தலைவர் தோழர்  P.S. அப்பர் அவர்கள் கோரிக்கைகளை விளக்கி எழுச்சியுரையாற்றினார். இ;மாநாட்டில் மாவட்ட, வட்டக் கிளை நிர்வாகிகள் உட்பட 59 ஆண்களும், 114 பெண்களுமாக 173 ஊழியர்கள் பங்கேற்றனர்.  இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர் ஆ.அம்சராஜ் நன்றி கூறினார்.