திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Thursday, September 30, 2010

28.09.2010 - திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசுகளின் புதிய பென்சன் திட்டத்தைக் கைவிடக் கோரி 28.09.2010 மாலை 6-00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் து.இராஜகோபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் செ.நடராஜன் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் என்.சுப்பிரமணியம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் முத்துநாராயணன் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் கந்தசாமி மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் பாக்கியம் ஆகியோர் பேசினர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத துணைத் தலைவர் தோழர் க.ஆறுமுகவள்ளல் நன்றி கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் எல்.ஐ.சி. பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பொதுத் துறை ஊழியர் சங்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை ஊழியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment