திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Monday, August 23, 2010

21.08.2010 சனிக்கிழமை - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொது மாநாடு

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முதல் மாவட்ட பொது மாநாடு  21.08.2010 சனிக்கிழமையன்று மாலை 3-30 மணிக்கு திருப்பூர், அரிசிக் கடை வீதியில் மாவட்டத் தலைவர் திரு எஸ்.முருகேசன் தலைமையில் தொடங்கியது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவருமான   திரு து.இராஜகோபாலன் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு கே.பால்ராஜ் சத்துணவு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட  ஊதியம், சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு ஊழியர்களை நியமிக்க வேண்டும், மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்ட எஸ்.எஸ்.ஏ.பள்ளிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் படி வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் விலைவாசி உயர்வுக்கேற்ப மானியத்தை 2ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் திரு மு. சீனிவாசன், சி.ஐ.டி.யு.அமைப்பின் மாவட்டத் தலைவர் திரு கே.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் திரு கே.பழனிச்சாமி புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் திருமதி என்.சுசீலா நன்றி கூறினார்.  திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment